Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Pudukkottai மீனவர்கள் 14 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை!

07:36 PM Sep 07, 2024 IST | Web Editor
Advertisement

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

Advertisement

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.  அதோடு மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து விடுவர்.  கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையிலும் அடைக்கப்படுவர்.

இந்த சூழலில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து மீனவர்கள் சிலர் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் இன்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்தனர். அதனுடன், அவர்களின் 3 விசைபடகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

Tags :
ArrestFishermenNeduntheevuPudukkottaisrilanka navytamil nadu
Advertisement
Next Article