Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

03:14 PM Apr 29, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிர மாநிலம் கோரேகான் பகுதியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

கடந்த வெள்ளிக்கிழமையன்று,  மும்பையின் கிழக்கு கோரேகன் பகுதியில் ஃபுட் பாய்சன் காரணமாக 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களிடம் விசாரித்ததில் கோரேகன் சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சேட்டிலைட் டவரில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட 12 பேரில் 9 பேர் உடல்நலம் சரியாகி வீடு திரும்பியுள்ளனர்.  மூன்று பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு ஒவ்வாமை ஏற்பட்டதா அல்லது வேறெதேனும் காரணமா என்று விசாரித்து வருவதாக பிரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Chicken ShawarmaFood PoisoninghospitalMumbai
Advertisement
Next Article