For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தினமும் 12 பாட்டில் பீர் | கலாபவன் மணி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்!

10:31 AM Nov 14, 2023 IST | Web Editor
தினமும் 12 பாட்டில் பீர்    கலாபவன் மணி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்
Advertisement

தென்னிந்திய திரையுலகில் முன்னணி குணசித்ர நடிகராக வலம் வந்த மறைந்த நடிகர் கலாபவன் மணி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 2016ல் உயிரிழந்த நடிகர் கலாபவன் மணியின் ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால் அதிகம் இருந்ததாக விசாரணை அதிகாரியான கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகர் கலாபவன் மணி தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே அவரின் மரணத்துக்கு முக்கிய காரணம் . கல்லீரல் செயலிழந்த நிலையிலும் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கலாபவன் மணி கைவிடவில்லை.

கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும், பீர் குடிப்பதை அவர் நிறுத்தவில்லை . மரணத்தை கலாபவன் மணியே தேடிக் கொண்டதாக விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மரணம் நடந்த 2016 மார்ச் 6ம் தேதியும் நடிகர் கலாபவன் மணி 12 பாட்டில் பீர் அருந்தியுள்ளார். தொடர்ந்து அதிகளவு பீர் குடித்து வந்ததால் , பீரில் இருந்த மெத்தில் ஆல்கஹால் மணியின் உடலில் அதிகளவு சேர்ந்துள்ளது.

மெத்தில் ஆல்கஹால் என்பது டர்பெண்டெயின், பெயிண்ட் அகற்ற பயன்படுத்தக் கூடிய வேதிப்பொருளாகும் இது உடலில் அதிகளவில் சேர்ந்தால் பல உடல்நல கோளாறுகளுக்கு ஆளாகி முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் இறுதியில் மரணிக்க நேரிடும்.

Advertisement