For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - கைதான ஆசிரியரின் செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்.!

10:32 AM Jan 18, 2024 IST | Web Editor
11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை   கைதான ஆசிரியரின் செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்
Advertisement

பதினோராம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வழக்கில் கைதான உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆசிரியரின் செல்போனில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எங்கே நடந்தது? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், இடலாக்குடி வட்டவிளை காமராஜ் தெருவை சேர்ந்தவர் சுந்தர்சிங்.  இவர் மயிலாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர், மேலும் பள்ளி செல்ல வசதியாக கன்னியாகுமரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.

சுந்தர்சிங் ஆசிரியராக பணிபுரியும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சுந்தர் சிங்கின் வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார்.  இந்த நிலையில் மாணவியை பள்ளிக்கு அழைத்து செல்வது வீட்டில் குழம்பு வாங்குவது என மாணவியிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்ட,  ஆசிரியர் சுந்தர்சிங்கிற்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. மாணவியின் பெற்றோர்களும் மாணவிக்கு கல்வி சம்பந்தமாக
ஆசிரியர் உதவி செய்வதாக நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

மேலும் மாணவிக்கு பல்வேறு உதவிகள் செய்ததோடு மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி அவரது காரில் பல்வேறு இடங்களுக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மாணவியின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட பெற்றோர் மாணவியிடம் விசாரித்துள்ளனர். இந்த நிலையில் நடந்ததை எல்லாம் மாணவி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து போலீசார் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் சிங்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.

சுந்தர் சிங் பள்ளியில் படிக்கும் மாணிவிகளை குறிவைத்து விளையாட்டில் மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு வருவதாக கூறி மாணவிகளிடம் தனது ஆசையை தீர்த்துள்ளார். மேலும் பல திருமணமான பெண்களுடன் உறவில் இருந்ததும் தெரிய வந்தது. சுந்தர்சிங் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணி செய்ததாகவும் அந்த பள்ளிகளில் படித்த மாணவிகள் , ஆசிரியர்கள் மற்றும் பல பெண்களை தனது வலையில் வீழ்த்தி கைவரிசையை காட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

மேலும் அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது பல பெண்களுடன் சுந்தர் சிங் இருக்கும் 100க்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்களும் 70க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும் இருந்தது தெரிய வந்தது. அவரின் செல்போனில் இருக்கும் பெண்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு பல பெண்களின் வாழ்க்கையை சீரலிக்கும் நோக்கில் பழகி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக பதிவு செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement