For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று - தமிழ்நாட்டில் 14 பேருக்கு உறுதி!

09:02 PM Dec 26, 2023 IST | Web Editor
இந்தியாவில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று   தமிழ்நாட்டில் 14 பேருக்கு உறுதி
Advertisement

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 116  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,170 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று மட்டும் 14 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 139 ஆக இருந்த நிலையில், இன்று 18 பேர் கொரோனா  தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
Advertisement