தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள்!
03:58 PM Dec 14, 2023 IST | Web Editor
Advertisement
தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
இது தொடர்பாக தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
- கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய் சிங் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
- திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
- திண்டுக்கல் எஸ்பியாக இருந்த பாஸ்கரன் சென்னை கிழக்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஐஜியாக பிரமோத் குமாரை தமிழக அரசு நியமித்துள்ளது.
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கூடுதல் டிஜிபியாக கல்பனா நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐஜியாக தமிழ் சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கோவை மண்டல குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு எஸ்பியாக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிறைத் துறை கூடுதல் டிஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- டிஎன்பிஎல் நிறுவன தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலராக அம்ரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையராக தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- மதுரை தெற்கு காவல் துணை ஆணையராக பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.