மார்ச் மாதத்தில் ரூ.1.78 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் - மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு!
08:39 PM Apr 01, 2024 IST | Web Editor
Advertisement
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 11.5% அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளதாகவும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இது இரண்டாவது அதிகபட்ச வசூல் எனவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement
இதுவரை ஜிஎஸ்டி வசூலில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஈட்டப்பட்டதே முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் நிகர திரும்ப செலுத்தப்பட்ட தொகை (ரீஃபண்ட்) ரூ.1.65 லட்சம் கோடியாகும். இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 18.4 சதவீதம் அதிகமாகும்.