Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வு - அசாம் மாநிலத்தில் #Internet சேவை கட்!

09:21 AM Sep 15, 2024 IST | Web Editor
Advertisement

அசாம் மாநிலத்தில் இன்று அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளதாக மொபைல் இணைப்புக்கான இணைய சேவை துண்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

Advertisement

அசாமில் மாநில அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற உள்ளது. மாநில அரசுப் பணிக்காண முக்கியமான எழுத்து தேர்வு இது என்பதால் தேர்வு நடைபெறும் நேரமான காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இணைய சேவை துண்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

அசாம் மாநிலத்திற்கான அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் மாநிலம் முழுவதும் செல்போன் தொடர்புடைய அனைத்து இணைய சேவைகளும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நிறுத்தப்படும்.

இந்தக் கட்டுப்பாடு மொபைல் போன் இணைய சேவைகளுக்கு மட்டும்தான். அதே வேளையில் தொலைபேசி இணைப்புகளின் அடிப்படையிலான குரல் அழைப்புகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு ஆகியவை வழக்கம்போல் செயல்பாட்டில் இருக்கும்" என உள்துறை தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
assaminternetShud down
Advertisement
Next Article