Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கவுண்டமணியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் வேண்டாம் என சொல்வேனா?" - நடிகர் செந்தில் பேட்டி!

06:47 PM Aug 17, 2024 IST | Web Editor
Advertisement

கவுண்டமணியுடன் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று நடிகர் செந்தில் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

வடசென்னை எண்ணூர் விரைவு சாலை திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு புஷ்பாஞ்சலி பூஜை நேற்று (ஆக. 16) நடைபெற்றது. இதில் நகைச்சுவை நடிகர் செந்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “ஆண்டுதோறும் கோயிலுக்கு வருவதால் எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்ல பலன்கள் கிடைத்து வருகிறது. இதேபோல, பொதுமக்களும் வந்து அம்மன் அருளை பெற வேண்டும்” என்றும் கூறினார்.

தொடர்ந்து, நடிகர் விஜய் தவெக கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு, அந்தக் கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்று நடிகர் செந்தில் பதிலளித்தார். மேலும், மீண்டும் கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு உண்டா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த செந்தில், “அந்த வாய்ப்பு கிடைத்தால் விட்டு விடுவேனா? வேண்டாம் என சொல்வேனா? நிச்சயம் அப்படியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்” என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படும் ஜோடிகளில் கவுண்டமணி- செந்திலும் ஒன்று. பல படங்களில் இவர்கள் இணைந்து நகைச்சுவையில் அசத்தியுள்ளனர். இப்போது கவுண்டமணி கதாநாயகனாக ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
ChennaiCinema updatesgoundamaniNews7Tamilnews7TamilUpdatessenthil
Advertisement
Next Article