மகளிர் உலக கோப்பை | வங்காள தேசத்திற்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு..!
13 ஆவது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. மழை காரணமக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் மழை நின்றுவிட்டதால் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்து வீசத் தேர்வு செய்தார்.
இந்தியா அணி : பிடாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வுரத்திகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா, உமா செத்ரி, அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்.
வங்காளதேச அணி : சுமையா அக்டர், ரூபியா ஹைதர் ஜெலிக், ஷர்மின் அக்தர், சோபனா மோஸ்டரி, நிகர் சுல்தானா, ஷோர்னா அக்டர், ரிது மோனி, ரபேயா கான், நஹிதா அக்டர், நிஷிதா அக்தர் நிஷி, மருபா அக்டர்.
பிற்பகல் 3:25 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டியானது மீண்டும் மழை குறுக்கிட்டதால் வங்காள தேச அணி பேட்டிங் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.