Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை அணி!

07:33 AM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது.

Advertisement

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.  இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பெற்ற இலங்கை - தாய்லாந்து அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தாய்லாந்து அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

தாய்லாந்து அணியில் அதிகபட்சமாக கன்னாபட் கொஞ்சாரோ 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில், தாய்லாந்து அணி 20 ஓவக்ரள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 93 ரன்களை மட்டுமே எடுத்தது.  இதனையடுத்து, 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விஷ்மி குணரத்னே, கேப்டன் சாமரி அடப்பட்டு ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

இதனால் இலங்கை அணி 11.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.  கேப்டன் சமாரி அடப்பட்டு 49 ரன்னும், விஷ்மி குணரத்னே 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.  இதன் மூலம் தாய்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியதால் வங்காளதேச அணியும் அரையிறுதிக்கு முன்னேறியது.

Tags :
#SportsCricketSL vs THASri Lanka WomenTHA vs SLThailand WomenWomen's Asia Cup
Advertisement
Next Article