Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இப்படியும் சாப்பிடலாமா? வித்தியாசமாக ரொட்டியை கழுவி சாப்பிடும் பெண்!

11:37 AM Feb 14, 2024 IST | Web Editor
Advertisement

பாகிஸ்தானில் அலிஷே என்ற பெண் மீதமிருந்த நானை தண்ணீரில் கழுவி மீண்டும் சூடுபடுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

பொதுவாக இரவு உணவில் மீதம் உள்ள உணவை மறுநாள் மீண்டும் சூடுபடுத்தி உண்ணுவது பொதுமக்களின் பொதுவான நடைமுறையில் இயல்பாக இருந்து வருகிறது. அந்த வகையில்,  பாகிஸ்தான் நாட்டின் கராச்சியைச் சேர்ந்த அலிஷே என்ற பெண் மீதமிருந்த இரவு உணவான நானைக் தண்ணீரில் கழுவி மீண்டும் சூடுபடுத்தினார்.

இதையும் படியுங்கள் : அன்று முதல் இன்று வரை... காதலர்களை கட்டிப்போட்ட பாடல்கள்!!

அவ்வாறு தண்ணீரில் கழுவி சூடுபடுத்தினால்,  மென்மையாக இருக்கும் என அந்த பெண் தெரிவித்தார்.  இது குறித்து அந்த பெண் ஒரு வீடியோ பதிவை கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி பதிவிட்டார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், மீதமிருக்கும் உணவை சூடுபடுத்துவதன் செய்முறையையும் இந்த வீடியோ பதிவில் கூறிருந்தார்.

இது குறித்து அலிஷே என்ற பெண் கூறியதாவது : 

"இரவு உண்ணவில் மீதம் உள்ள உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது மிகவும் ருசியாக இருக்கும்.  புதிதாக சமைத்து சாப்பிடுவதை காட்டிலும் மீதமிருக்கும் உணவை சூடுபடுத்தி சாப்பிடுவது பத்து மடங்கு சுவையாக இருக்கும்.  அந்த நானை தண்ணீரில் கழுவினால்,  இதன் வறண்ட தன்மை நீங்கி மென்மையாகவும் மீண்டும் புதியது போலவும் மாறும்" என அலிஷே தெரிவித்தார்.

Tags :
alishaybeforeeatkarachinaanpakistanVideoViralwasheswoman
Advertisement
Next Article