Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு: தமிழ்நாட்டில் நவ.14 முதல் பரவலாக மழை பெய்யும்!

06:43 AM Nov 11, 2023 IST | Web Editor
Advertisement

வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், 14-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது:

"தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழ்நாட்டில் வரும் 14-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களிலும், 14, 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 9 செ.மீ., திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, சென்னை அம்பத்தூரில் 8 செ.மீ., திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில்7 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் களியல், புழல், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
#ClimateChennai RMCHeavy rainIMCNews7Tamilnews7TamilUpdatesRain UpdatesWeather Updates
Advertisement
Next Article