Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மலைக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி!

09:42 AM Jul 11, 2024 IST | Web Editor
Advertisement

கள்ளக்குறிச்சியில் செல்ல முடியாத மலைப்பகுதிகளில், குதிரைகள் மூலம் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு அப்பகுதி மலை வாழ் மக்களின் வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், ஏன் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கூட இதுவரை செய்து கொடுக்கவில்லை? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

கல்வாரயன் மலைப்பகுதிகளில் விஷச்சாராயம் காய்ச்சப்பட்டு, கள்ளக்குறிச்சி
உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்படுவதாகவும், கல்வராயன மலைவாழ் மக்கள் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படுவதாக வழக்கறிஞர் தமிழ் மணி தொலைக்காட்சி நேர்காணலில் பேசி இருந்தார். அந்த நேர்காணலை அடிப்படையாக வைத்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில்
நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் இந்த வழக்கும், சிபிஐ விசாரணை கோரிய வழக்கும் ஒன்றல்ல என நினைப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதிகள், அந்த வழக்கிற்கும், இதற்கும் சம்பந்தமில்லை. இந்த வழக்கு கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக பொருளாதாரம் சார்ந்தது எனத் தெரிவித்தனர்.

மேலும், ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட, 95 சதவீதம் பழங்குடி மக்கள்
வசிக்கும் கல்வராயன் மலைப்பகுதி 1976 ஆம் ஆண்டில் தான் இந்தியாவுடன்
இணைக்கப்பட்டிருக்கிறது. 1996 ஆம் ஆண்டு முதல் தான் அப்பகுதி மக்களுக்கு
வாக்குரிமை கிடைத்து இருக்கிறது. அந்த பகுதி மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர்
எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அந்த மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை
தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் தமிழ்மணி, அரசு அதிகாரிகள், அரசை பாதுகாக்கும்
வகையில் அறிக்கை அளிப்பர் என அச்சம் தெரிவித்தார். மேலும் அவர், அந்த
பகுதியில் பேருந்து வசதியில்லை. மருத்துவமனைகள் இல்லை. கர்ப்பிணிகள் 40
கிலோ மீட்டர் தூரத்துக்கு தோளில் சுமந்து செல்கின்றனர் எனத் தெரிவித்தார். இதையடுத்து, உண்மை தகவல்களை அறிக்கையாக அளிப்பதை உறுதி செய்ய நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் தமிழ்மணியை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், 1996 முதல் கல்வராயன் மலைப்பகுதி மக்களின் வாக்குகளைப் பெற்ற அரசுகள்,
அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கியிருக்கிறதா? இல்லையா? இதை கவனிப்பது அரசின் அரசியலமைப்பு சட்ட கடமை அல்லவா எனத் தெரிவித்த நீதிபதிகள், அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என கண்டறிய வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.

1947 முதல் நாம் உரிமைகளை அனுபவித்து வருகிறோம். 1976 ல் இருந்து தான் அவர்கள் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் நாமும் அங்கிருந்து கஷ்டங்களை உணர வேண்டும். அரசின் நலத் திட்டங்கள் அந்த மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இத்தனை ஆண்டுகளாக ஆட்சியர், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் என்ன செய்கின்றனர் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அங்கு வசிக்கும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அரசு சலுகைகள் சென்றடைந்துள்ளனவா? அந்த பகுதி மக்கள் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன? என ஜூலை 24ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் பத்திரிகையாளர்கள், கல்வராயன் மலைப்பகுதி மக்கள் நலனில் அக்கறை
கொண்டவர்களும் அறிக்கை தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags :
basic facilitiesCMO TamilNaduKallakurichimadras highcourtTN Govt
Advertisement
Next Article