Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை  மழை பெய்யும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08:03 PM Nov 04, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை  மழை பெய்யும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூறும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானில ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த நிலையில், தமிழ்நாட்டில்   7 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை  மழை பெய்யும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றிரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
latestNewsRainRainUpdateTNnewsWeatherWeatherUpdate
Advertisement
Next Article