காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
07:07 AM Dec 06, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
அதன்படி, தமிழ்நாட்டில் கோயம்பத்தூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி, நீலகிரி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article