Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்குமார் - நலம் விசாரித்த விஜய்!

02:00 PM Mar 10, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் அஜித்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் விஜய் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : “ஜாபர் சாதிக் வழக்கில் திமுகவை தொடர்பு படுத்துபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம்” -திமுக எம்.பி. வில்சன் 

அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதையும் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.  அதேபோல நேற்று மருத்துவ பரிசோதனைக்காக  சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நடிகர் அஜித் சென்றிருந்தார்.  பரிசோதனைகள் முடிவில் அவரின் மூளையில் லேசான வீக்கம் இருந்தது தெரியவந்திருப்பதாகவும்,  அப்போலோ மருத்துவமனையில் மருத்துவர் பெரியகருப்பன் தலைமையில் நடிகர் அஜித்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியானது அகற்றப்பட்டது என்றும் தகவல் வெளியானது.

அஜித்துக்கு மூளையில் கட்டியும் இல்லை அறுவைச் சிகிச்சையும் இல்லை என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.  காதில் ஏற்பட்ட உபாதைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  அளிக்கப்பட்டதாகவும்,  அதையும் நேற்றே சரி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில்,  காது பகுதியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதைத்தொடர்ந்து, அவர் வீடு திரும்பிய நிலையில், அஜித்திடம், நடிகர் விஜய் நலம் விசாரித்துள்ளார். இது அஜித், விஜய் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags :
actorAjithkumarphone callvijay
Advertisement
Next Article