Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

என்ன நடக்குது இங்க... பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுத்த சாச்சனா?

02:25 PM Oct 11, 2024 IST | Web Editor
Advertisement

24 மணி நேரத்திற்குள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர் சாச்சனா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

Advertisement

மக்கள் அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை, விஜய் சேதுபதி எவ்வாறு தொகுத்து வழங்க போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்திருந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிகவும் சிறப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கையாண்டு வருகிறார் விஜய் சேதுபதி.

இந்த சீசனில் 18 போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பினார் விஜய் சேதுபதி. அதில் ஒருவர் தான் மகாராஜா படத்தின் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா. இந்த முறை வித்தியாசமான முறையில் போட்டி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. முதல்முறையாக வீட்டிற்குள் வந்த 24 மணிநேரத்திலேயே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களிடையே பெரும் விவாதத்திற்கு வழிவகுத்தது. இந்நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல் தற்போது ஒரு நிகழ்வு பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறியுள்ளது.

அதாவது 24 மணி நேரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்ட சாச்சனா, தற்போது மீண்டும் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களிடையே பேசுவது போன்ற புரோமோ ஒன்று இன்று வெளியாகி உள்ளது. இதனால் வீட்டிற்குள் இருக்கும் அனைவரும் ஆடிப்போயுள்ளனர். என்னடா இது இப்படியொரு ட்விஸ்ட்டா என்பது போல் பிக் பாஸ் 8-ல் திருப்பம் நிகழ்ந்துள்ளது. இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
BIGG BOSSBigg Boss8SachanaVijay sethupathi
Advertisement
Next Article