Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘தமிழக வெற்றி கழகம்’ மக்களுக்கு என்ன செய்யும்?.. - புஸ்ஸி ஆனந்த் பேட்டி..

07:28 AM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

 “மக்களுக்கு ஏற்ற மாதிரி செயல்படுவோம்” என விஜய் ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

Advertisement

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்,  நேற்று அவர் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கு‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இக்கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் ரசிகர் மன்ற பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

”தமிழக வெற்றி கழகம் கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை வழங்கி உள்ளோம். மற்ற விவரங்களை தலைவர் அறிக்கையில் கூறி உள்ளார். கட்சியை அதிகாரப்பூர்வமாக
அறிவித்து உள்ளோம். இனி கட்சி கொள்கைகளை பற்றி பேச நபர்கள் அதிகாரப்பூர்வமாக
நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் கேட்டால் உரிய பதிலை தருவார்கள். எதுவாக
இருந்தாலும் தலைவரின் அனுமதி பெற்று தான் சொல்ல முடியும். ரசிகர்கள் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தை வரவேற்றார்கள். மக்களுக்கு ஏற்ற மாதிரி இனி நாங்கள் செயல்படுவோம்” இவ்வாறு  புஸ்ஸி ஆனந்த்  கூறினார்.

Tags :
actor vijayBussy AnandDMKTamizhaga Vetri KazhagamtvkvijayVijay Rasigar Mandram
Advertisement
Next Article