Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WeatherUpdate | வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி… அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

02:24 PM Aug 30, 2024 IST | Web Editor
Advertisement

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

Advertisement

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. செப்.3ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மத்திய மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக் கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், பின்னர் அது ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களிலும், ஒடிசா மாநிலத்திலும் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஆங்காங்கே சாரல் மழையும் பெய்து வருகிறது.

Tags :
IMDrain alertrainfallTn RainsWeatherWeather Update
Advertisement
Next Article