Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வானிலை எச்சரிக்கை - இந்த 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
09:09 PM Aug 07, 2025 IST | Web Editor
இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தர்மபுரி, புதுக்கோட்டை, திருப்பட்டூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த மழை வெப்பச்சலனம் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மழை மற்றும் இடி மின்னலின்போது பொதுமக்கள் திறந்தவெளியில் நிற்காமல் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும். இடி மின்னல் ஏற்படும்போது மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.இந்த மழை விவசாயத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதிக கனமழை ஏற்பட்டால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மழை, பல நாட்களாக நிலவி வந்த வறண்ட வானிலைக்கு ஒரு தீர்வாக இருக்கும் என மக்கள் நம்புகின்றனர். பிற மாவட்டங்களிலும் மழை வருமா என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags :
ChennaiRainsIMDRainAlertTamilnaduRainsWeatherUpdate
Advertisement
Next Article