Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பத்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்" - சேலத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பேச்சு

10:19 PM Feb 18, 2024 IST | Web Editor
Advertisement

"பத்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்"  என சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி தெரிவித்துள்ளார்.

Advertisement

சேலம் தாதகாபட்டி பகுதியில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன்,  பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்,மேயர் ராமசந்திரன், மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு. திமுக நிர்வாகிகள் , தொண்டர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்ததாவது..

"நாடு எதிர்நோக்கி இருக்கின்ற அபாயத்தை உங்களுக்கு விளக்கி காட்டி நாடாளுமன்ற தேர்தலிலே பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை அதள பாதாளத்தில் இருந்து ஒருவராலும் காப்பாற்ற முடியாது.

பத்தாண்டு காலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீதும் சமதர்மத்தின் மீதும் ஒடுக்கப்பட்டோரின் உரிமை மீதும் வெந்நீரை பாய்ச்சி அதனை வெந்து தணிந்திருக்கின்ற காடாக சாக்காடாக மாற்றி இருக்கின்ற பாஜக ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் “ என தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

Tags :
DMKElection2024Tamizhachi Thangapandian
Advertisement
Next Article