Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தயாரிப்பாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்!" - நாசர் பேட்டி

09:54 PM Aug 11, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர்களின் சம்பளம் தொடர்பான விவகாரம் பிரச்னையாகியுள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் நடிகர் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

Advertisement

நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி தமிழ்நாட்டில் புதிய படப்பிடிப்புகள் நடைபெறாது என தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் வெளியிட்டது. இந்த நிலையில், சென்னை தியாகராயர் நகர், அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த செயற்குழுக்கூட்டமானது நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது.
இதில் நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பூச்சி முருகன் மற்றும் நடிகர் சங்க
பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் சிலர்
பங்கேற்றனர். இதில் நேரில் பங்கேற்காத சங்க பொதுச்செயலாளர் விஷால் மற்றும்
துணைத் தலைவர் கருணாஸ் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க தலைவர்
நாசர் பேசுகையில், நடிகர்களின் சம்பளத்தை குறைப்பது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். இதனால், இருதரப்பினர் இடையே சுமூகமான சூழல் ஏற்படும் என நம்புவதாகவும் நாசர் கூறினார்.

Tags :
Actor NasarcinemaKarthiKollywoodnasarProducer Association
Advertisement
Next Article