Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது - பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்!

09:13 AM Aug 05, 2024 IST | Web Editor
Advertisement

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் வி.முரளிதரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.

சுமார் 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து 7வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 387 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இதுவரை 172 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 8 பேரின் உடல்கள் நேற்று (ஆக. 4) தகனம் செய்யப்பட்டன. மீதமுள்ளவர்களின் உடல்கள் இன்று தகனம் செய்யப்பட உள்ளன. இன்னும் 180 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இதனை  தேசிய பேரிடர் அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வி.முரளீதரன் ஃபேஸ்புக்கில் ஆக. 4ம் தேதி வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது..

” கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில், உள்துறை இணையமைச்சராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் பதவி வகித்தபோது தேசிய பேரிடர் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தக் கேள்விக்கு பதிலளித்த முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், 'மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் ஓர் இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை' என்றார்.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் 'தேசிய பேரிடர்' குறித்த சிந்தனையே இல்லை. இது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தே நடைமுறையில் இருக்கும் உண்மை. இதை முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் வெளிப்படையாகவே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும் ஒவ்வொரு பேரிடரும், அதன் தீவிரத்துக்கு ஏற்ப கையாளப்படுகிறது. வயநாடு நிலச்சரிவைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்புகொண்டு அனைத்து உதவிகளை வழங்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார். எனவே இந்த நேரத்தில் அடிப்படை ஆதாரமில்லாத சர்ச்சைகளை உருவாக்க எவரும் முயற்சிக்க வேண்டாம் ” என அப்பதிவில் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Tags :
landslideNational DisasterPray For WayanadWayanad
Advertisement
Next Article