Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"போலி ஆடிஷன்கள் குறித்து எச்சரிக்கை!"- இயக்குநர் பா. ரஞ்சித்!

நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் பெயரில் இணையத்தில் பகிரப்பட்டு வரும் ஆடிஷன் அழைப்புகள் அனைத்தும் போலியானவை என நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
09:11 PM Aug 23, 2025 IST | Web Editor
நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் பெயரில் இணையத்தில் பகிரப்பட்டு வரும் ஆடிஷன் அழைப்புகள் அனைத்தும் போலியானவை என நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement

 

Advertisement

பிரபல இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இணையதளங்களில் பரவி வரும் நடிகர்களுக்கான ஆடிஷன் அழைப்புகள் அனைத்தும் போலியானவை என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில், குறிப்பாக Facebook, Instagram போன்ற தளங்களில், நீலம் புரொடக்‌ஷன்ஸ் பெயரில் சில நபர்கள் புதிய படங்களுக்கான ஆடிஷன்கள் நடைபெறுவதாகப் போலியான அறிவிப்புகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த அறிவிப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

நீலம் புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் நிறுவனத்தின் சார்பில் எந்த ஒரு படத்திற்கான ஆடிஷன் அழைப்புகளும் சமூக வலைதளங்கள் மூலம் வெளியிடப்படவில்லை. அப்படி ஒரு தேவை ஏற்படும்போது, அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் மட்டுமே அறிவிப்பு வெளியிடப்படும். போலியான நபர்களின் பேச்சைக் கேட்டு பணத்தையோ அல்லது தனிப்பட்ட தகவல்களையோ கொடுத்து ஏமாற வேண்டாம்" என்று எச்சரித்துள்ளது.

சினிமா வாய்ப்புகளைத் தேடி வரும் இளம் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள், இதுபோன்ற போலி அழைப்புகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
CastingCallCyberCrimeeelamProductionsFakeAuditionPaRanjithTamilCinema
Advertisement
Next Article