Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விருதுநகர்: இந்து சமுதாய மக்களின் சீர்வரிசையோடு மத நல்லிணக்கத்துடன் நடைபெற்ற கந்தூரி திருவிழா...!

08:55 AM Feb 09, 2024 IST | Web Editor
Advertisement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வாழவந்த புரம் காதிர் அவுலியா
பள்ளிவாசலில் கந்தூரி திருவிழா மத நல்லிணக்கத்துடன் நடைபெற்றது.

Advertisement

இஸ்லாமியர்களின் முக்கிய திருவிழாவான கந்தூரி திருவிழா இன்று
கொண்டாடப்படுகிறது இந்நிலையில் அருப்புக்கோட்டை வாழவந்த புரம் காதிர் அவுலியா
பள்ளிவாசலில் கந்தூரி திருவிழா மத நல்லிணக்கத்துடன் நடைபெற்றது. நாடார்கள்
உறவின்முறை அலுவலகத்திலிருந்து இந்து சமுதாய மக்கள் கந்தூரி திருவிழாவை
முன்னிட்டு வாழவந்தபுரம் காதிர் அவுலியா பள்ளிவாசலுக்குச் சீர்வரிசையுடன்
ஊர்வலமாக வந்தனர்.

மத நல்லிணக்க அடிப்படையில் பள்ளிவாசலுக்கு சீர்வரிசையுடன் வந்த இந்து சமுதாய மக்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் வரவேற்று சீர்வரிசையை பெற்றுக் கொண்டனர். பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகைக்கு அனைவருக்கும் கந்தூரி விருந்து அளிக்கப்பட்டது. இந்தப் பள்ளிவாசலுக்கு இந்து சமுதாய மக்கள் சீர்வரிசை கொண்டு வந்தது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கந்தூரி விழா நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி ஏ.எஸ்.பி கருண் கரட், நகர்மன்ற உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement
Next Article