Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ViralVideo | மகன் வேலைக்குச் செல்லாததால் ஆட்டோ ஓட்டுநரான மூதாட்டி | நள்ளிரவு 1.30 மணி வரை உழைக்கும் வீடியோ!

02:11 PM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

55 வயது பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஒரு காலத்தில் ஒரு சில பெண்கள் மட்டுமே வேலை அல்லது வியாபாரம் செய்தவர்கள், ஆனால் இப்போது வேலை செய்யும் பெண்கள் அதிகம். சிலர் ஆர்வத்தாலும், சிலர் குடும்ப கட்டாயத்தாலும் செய்கிறார்கள். அத்தவகையில், ஆதரவற்ற ஒரு பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சில பெண்கள் வாடகை வண்டிகள் அல்லது இ-ரிக்ஷாக்களை ஓட்டுவதை பார்த்திருக்கலாம். ஆனால் எந்தப் பெண்ணும் இரவில் இதைச் செய்வதைக் காண முடியாது, ஆனால் இந்த மூதாட்டி இரவில் தான் இ-ரிக்ஷாவை ஓட்டுவதாகக் கூறுகிறார்.

இந்த காணொளியில் நடத்தப்பட்ட ஒரு சிறு நேர்காணலில், அவர் ஏன் இந்த வேலையைச் செய்ய வேண்டும், ஏன் பெருமையுடன் செய்கிறேன் என்று தனது கதையை விவரித்துள்ளார். அவரின் இந்த தைரியத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

அதில், தனக்கு 55 வயதாகிறது என்றும், இந்த வயதிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால் தான் இ-ரிக்ஷாவை ஓட்டுகிறேன் என்றும் கூறினார். மேலும் தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், ஆனால் அவர் எந்த வேலையும் செய்வதில்லை என்றும், அதனால் தான் கட்டாயத்தின் பேரில் வேலை செய்ய வேண்டியுள்ளது என்றும் கூறினார். மாலையில் இ-ரிக்ஷாவில் வீட்டை விட்டு வெளியேறி இரவு 1 முதல் 1.30 மணிக்குள் தன் வீட்டை அடைகிறேன் என்று அந்தப் பெண் கூறுகிறார். பிறகு வீட்டுக்குப் போன பிறகுதான் சாப்பாடு. மேலும், தனது மகன் தன்னுடன் சண்டையிடுவதாகவும், வேலை செய்யச் சொல்வதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி, வீட்டில் பெருட்களை உடைப்பதாகவும் கூறினார்.உழைத்து பணம் சம்பாதித்து மரியாதையாக வாழ முயல்வதால் பிச்சை எடுப்பதை விட சிறந்தது என்கிறார் பெண்.

இந்த இதயத்தைத் நொருங்க செய்யும் வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @Gulzar_sahab என்ற ஐடியுடன் பகிரப்பட்டுள்ளது. வெறும் 58 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வீடியோவை விரும்பியுள்ளனர்.

அதே சமயம் அந்த வீடியோவை பார்த்து மக்கள் பல்வேறு விதமான ரியாக்ஷன்களை கொடுத்துள்ளனர். ஒரு பயனர் எழுதியுள்ளார், 'வாழ்க்கை விசித்திரமானது. கடவுளே அப்படிப்பட்ட குழந்தையை யாருக்கும் கொடுக்கக் கூடாது. அவர்கள் மற்ற பெண்களுக்கு உத்வேகமாக உள்ளார் என அவரது பலத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags :
| 55 year old womaninspirationmotivation
Advertisement
Next Article