Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Maharaja திரைப்படம் குறித்து நடிகர் விஜய் கூறியது என்ன? இயக்குநர் நித்திலன் வெளியிட்ட அப்டேட்!

03:14 PM Oct 21, 2024 IST | Web Editor
Advertisement

'மகாராஜா' திரைப்படத்தை பற்றி நடிகர் விஜய் கூறிய கருத்துகளை இயக்குநர் நித்திலன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் மகாராஜா. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்தனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. ஓடிடி வெளியீட்டிலும் உலகளவில் வரவேற்பைப் பெற்றது. திரையரங்கில் 100 நாள்கள் கடந்ததும் தயாரிப்பாளர்கள் இயக்குநருக்கு சொகுசு காரை பரிசளித்தனர்.

இதையும் படியுங்கள் : அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் நித்திலன் சாமிநாதன், மகாராஜா திரைப்படத்தைப் பார்த்த நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டினார் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது ;

"ஒரு பெரிய கமர்சியல் நடிகர் இப்படியெல்லாம் படம் பார்ப்பாரா என்கிற அளவிற்கு மகாராஜா குறித்து நடிகர் விஜய் சொன்ன விவரங்கள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. முக்கியமாக, சிங்கம்புலி மற்றும் மகள் கதாபாத்திரத்திரங்களுக்கு இடையான அவருடைய பார்வையும் புரிதலும் ஆச்சரியப்பட வைத்தன”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
actorMaharajaNews7Tamilnews7TamilUpdatesSinghambulivijayVijaysethupathi
Advertisement
Next Article