Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அரசியலில் பதில் சொல்லும் அளவிற்கு விஜய் வளரவில்லை” - அமைச்சர் ரகுபதி கருத்து!

05:11 PM Dec 07, 2024 IST | Web Editor
Advertisement

அரசியலில் பதில் சொல்லும் அளவிற்கு விஜய் வளர்ந்துள்ளாரா என்றால் எங்களை பொறுத்தவரை இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

“கூட்டல், கழித்தல் விஜய்க்கு தெரியாமல் இருக்கலாம். பிளஸ் எல்லாம் மைனஸ் ஆகும் என எந்த விதத்தில் கூறுகிறார். சினிமா துறையில் வேண்டுமென்றால் மிகப் பெரிய ஹீரோ, ஹீரோயின், மிகப்பெரிய தயாரிப்பாளர், இயக்குநர் என அனைத்து பிளஸ்சும் இருக்க கூடிய திரைப்படம் தோல்வியடையும். ஆனால் அரசியலில் எந்த பிளஸ்ஸும் மைனஸ் ஆக வாய்ப்பு கிடையாது. பிளஸ்ஸை மைனஸ் ஆக்கும் வல்லமை விஜய்க்கும் கிடையாது. இது யாராலும் போட முடியாத கணக்கு. கடன் வாங்கி கணக்கு போடுபவர்கள் வேண்டுமானால் அவ்வாறு கூறலாம். நாங்கள் கடன் வாங்கி கணக்குப் போடவில்லை.

தன்னோடு விசிக தலைவர் திருமாவளவன் வருவார் என்பது நடிகர் விஜய்யின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், திமுக கூட்டணியில்தான் இருக்கிறேன் என்று திருமாவளவன் தெளிவாக கூறிவிட்டார். திமுக மன்னராட்சியை நடத்தவில்லை. ஜனநாயக ஆட்சியைத்தான் நடத்துகிறது. வாரிசு அரசியல் இல்லை. உழைப்பினால்தான் வந்துள்ளோம். திமுகவின் ஒவ்வொரு தொண்டரும் ஏற்றுக்கொண்ட தலைவர்தான் ஸ்டாலின். அதேபோலதான், உதயநிதி ஸ்டாலினின் உழைப்பை ஏற்றுக்கொண்டு தொண்டர்களின் வலியுறுத்தலினால் அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. வாரிசு என்ற அடிப்படையில் அவருக்கு துணை முதல்வர் பதவி வரவில்லை.

அரசியலில் யாருக்கு வேண்டும் என்றாலும் பதில் சொல்லலாம். அதற்கு தகுந்த நேரம் வரவேண்டும். இன்றைக்கு விஜய் அந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறாரா என்றால், இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவின் மாடலை முன்னெடுத்து செல்லக்கூடிய கருத்தியல் தலைவர்.

வேங்கை வயல் விவகாரத்தில் நீதியரசர் சத்திய நாராயண கமிஷன் நியமித்துள்ளோம். டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அரசாங்க முறைப்படி இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். வேங்கை வயல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

இதில் அமைச்சரோ, எம்எல்ஏவோ குறிக்கீடு செய்யவில்லை. அங்கிருக்கும் சாதி அரசியலை வைத்துக்கொண்டு கற்பனை செய்து கொண்டால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. டிஎன்ஏ பரிசோதனை ஒத்துப் போகவில்லை. இனிமேல் கிராமத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனை செய்துதான் பார்க்க வேண்டும். அதையும் வேண்டுமென்றால் செய்வோம். கூட்டணியை விமர்சிக்கும் வகையில் விசிக ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பாக விசிகவில் இருந்து அவரை நீக்குவதெல்லாம் அந்தக் கட்சியின் உள் விவகாரம். அதைப் பற்றி எதையும் நாங்கள் வெளியில் இருந்து அந்தக் கட்சிக்கு ஆலோசனை கூற முடியாது.

திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தப்பு கணக்கு போடும் பழக்கம் கிடையாது. நாங்கள் சக்திவாய்ந்த கட்சி. நாதக சாதாரமான கட்சி. அவர்கள் இப்போதுதான் மூன்றாவது இடத்திற்கு வந்திருப்பதாக சீமானே கூறுகிறார். கட்சியில் இருந்த அனைவரும் அவரை விட்டு சென்றுவிட்டனர். வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாலும், தனிமனித உரிமையை காப்பாற்றிக் கொள்ள சீமானுக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கையில் அவருடன் நேரடியாக மோதுவதற்கு எங்களுக்கு என்ன பயம்? மத்திய அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அதானியோடு அதிமுக ஆட்சியில்தான் கடந்த 2014-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டதே தவிர, திமுகவில் அல்ல. முல்லைப் பெரியாறு அணையை தமிழக பொறியாளர்கள் பராமரித்து வருகின்றனர்”  என தெரிவித்தார்.

Tags :
DMKlaw ministerRegupathytvkvijay
Advertisement
Next Article