Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வேட்டையன் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை துஷாரா!

07:40 PM Aug 01, 2024 IST | Web Editor
Advertisement

நடிகை துஷாரா விஜயன் 'வேட்டையன்' திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

Advertisement

ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் த.செ.ஞானவேல் ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்தை வைத்து 'வேட்டையன்' என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். பின்னர் நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்கன், அநீதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் துஷாரா, நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : வயநாடு நிலச்சரிவு : பாதிக்கப்பட்ட இடங்களில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆய்வு!

இந்நிலையில் நடிகை துஷாரா 'வேட்டையன்' திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே இதன் டப்பிங் பணிகளை ஃபக்த் பாசில் முடித்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags :
#Vettaiyancinemadubbing workDusharamovieRajinikanthtjgnanavel
Advertisement
Next Article