Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரண்டு ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
04:22 PM Jun 11, 2025 IST | Web Editor
ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரண்டு ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
Advertisement

பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது,

Advertisement

ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இந்திய ரயில்வேயின் இரண்டு மல்டிடிராக்கிங் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இது இந்திய ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பை சுமார் 318 கி.மீ. அதிகரிக்கும். திட்டங்களின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு ரூ.6,405 கோடி. 133 கி.மீ நீளத்திற்கு கோடர்மா - பர்கானா வழித்தடத்தை இரட்டைமயமாக்கும் திட்டம்; 185 கி.மீ தூரமுள்ள பல்லாரி - சிக்ஜாஜூர் இரட்டிப்பு ஆகிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் பயணிகளின் பயண வசதியை மேம்படுத்துவதோடு, தளவாடச் செலவைக் குறைக்கும், எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, குறைந்த கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வுக்கு பங்களிக்கும். நிலையான மற்றும் திறமையான ரயில் செயல்பாடுகளை ஆதரிக்கும். மேலும் இந்த திட்டங்கள், கட்டுமானத்தின் போது சுமார் 108 லட்சம் மனித நாட்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் என தெரிவித்தார்.

Tags :
approvesAshwini VaishnavIndian RailwaysRailway ProjectsUnion Cabinet
Advertisement
Next Article