Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெண்ணிடம் இன்ஸ்டாகிராமில் நெருங்கி பழகி ஆபாசமாக வீடியோ: சென்னையை சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்த புதுச்சேரி போலீசார்!

12:27 PM Nov 03, 2023 IST | Student Reporter
Advertisement

இன்ஸ்டாகிராமில் பெண்ணிடம் நெருங்கி பழகி ஆபாசமாக வீடியோ எடுத்த சென்னை இளைஞர்கள் 2 பேரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

புதுச்சேரியின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 32 வயது பெண் கடந்த 4 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார். அ வருடைய இன்ஸ்டாகிராம் ஐ.டிக்கு நண்பராக ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.  தொடர்ந்து இன்ஸ்டாகிராம் கால் அழைப்பை ஏற்று,  அந்த நபருடன் 2 வாரங்களாக அப்பெண் பேசி பழகியுள்ளார்.  நெருங்கி பழகியதால்,  அந்த நபர் கேட்டுக் கொண்டதால் சம்மந்தப்பட்ட பெண் நிர்வாணமாக வீடியோ காலில் அவருடன் பேசியுள்ளார். இதனை அந்த நபர் ஸ்கிரீன் ரெக்கார்டு மூலம் பதிவு செய்து வைத்துக் கொண்டார்.  பின் அந்தப் பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.

6 மாதங்களுக்கு பின்னர் அந்த நபர் என்னிடம் ஏன் முன்பு போல் பேசுவதில்லை,  நான் சொல்லும் போதெல்லாம் நீ என்னிடம் அதே போன்று பேச வேண்டும் இல்லையென்றால் நீ நிர்வாணமாக இருக்கும் வீடியோ இருக்கிறது.  இதனை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழிக்கும் வீடியோவை அனுப்பி மிரட்டியுள்ளார்.  இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார் இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், நிர்வாண வீடியோவை வைத்து பெண்ணை மிரட்டிய சென்னையை சேர்ந்த தினேஷ்குமார்(23) அவரது நண்பர் அருண்பாண்டியன்(28) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், தினேஷ்குமார் ரெக்கார்டு செய்த நிர்வாண வீடியோவை அவருடைய நண்பர் அருண் பாண்டியன் கேட்டதால் அந்த வீடியோவை அவருக்கும் அனுப்பியிருந்தது தெரியவந்தது.  அந்த வீடியோவை வைத்துக் கொண்டு அருண்பாண்டியனும்,  சம்மந்தப்பட்ட பெண்ணை வீடியோ காலில் வருமாறு மிரட்டியுள்ளார்.  தொடர்ந்து போலீசார் தினேஷ்குமார், அருண்பாண்டியன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags :
இன்ஸ்டாகிராம்புதுச்சேரிசென்னைசைபர் க்ரைம் போலீசார்
Advertisement
Next Article