Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாட்டில் மூன்றில் இருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு!

10:00 AM Apr 06, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் மூன்றில் இருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பும், மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பதாக அப்பல்லோ மருத்துவக் குழுமம் தெரிவித்துள்ளது.

Advertisement

இயந்திரமயமான இன்றைய உலகில் பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்த நோயால் அவதிப்படுகின்றனர். வேலைப்பளு தூக்கமின்மை முறையற்ற உணவுப் பழக்க வழக்கம் போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் மூன்றில் இருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பும், மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பதாக அப்பல்லோ மருத்துவக் குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தங்களது நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தேசத்தின் ஆரோக்கியம் - 2024 என்ற அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “எங்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டவா்களில் நான்கில் மூவருக்கு உடல் பருமன் இருப்பது கண்டறியப்பட்டது. அதே போல், மூவரில் இருவருக்கு உயர் ரத்த அழுத்தமும்,  ஒருவருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பது கண்டறியப்பட்டது. நான்கில் ஒருவருக்கு தூக்க தடை பாதிப்பு இருந்ததும் தெரியவந்தது” என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ApolloBPHealth Nation ReportHigh Blood PressureNCDNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article