Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சேலம் | சாலை பணியின்போது வெடித்து சிதறிய சிலிண்டர்!

சேலத்தில் சாலையில் வெள்ளை கோடு வரையும் பணியின் போது லாரியில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது.
02:20 PM Jan 31, 2025 IST | Web Editor
சேலத்தில் சாலையில் வெள்ளை கோடு வரையும் பணியின் போது லாரியில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது.
Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து தாரமங்கலம், சின்னப்பம்பட்டி கொங்கணாபுரம், சங்ககிரி வழியாக திருச்செங்கோடு வரை நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ஓமலூர் அருகே உள்ள சின்னப்பம்பட்டி பகுதியில் ஆங்காங்கே சாலை அமைக்கப்பட்டு, சாலையின் நடுவே வெள்ளை கோடுகள் வரையப்பட்டு வருகிறது.

Advertisement

இதற்காக பல இடங்களில் பணியாளர்கள் லாரியில் வெள்ளைக்கோடு வரையும் பவுடரை சிலிண்டர் மூலம் காய்ச்சி வருகின்றனர். அந்த வகையில், நேற்று மாலை  செக்குமேடு என்ற இடத்தில் சாலையில் வெள்ளை கோடு வரையும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அந்த லாரியில் இருந்த சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.  இதானல் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடினர். பெரிய தீ விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தொழிலாளர் ஒருவர் அருகில் இருந்த நீரை எடுத்து லாரியில் ஊற்ற முயன்றார்.

அவர் லாரியின் அருகில் சென்றபோது சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. உடனடியாக தொழிலாளர் உள்ளிட்ட இருவர் அங்கிருந்து தப்பி ஓடினர். தொழிலாளர்கள் சுதாரித்துக் கொண்டதாலும், போக்குவரத்து குறைந்த இருந்ததாலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags :
Cylinder blastroad workSalem
Advertisement
Next Article