Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 60 நாட்களாக அதிகரிப்பு!

09:58 PM Mar 15, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் 30 நாட்களிலிருந்து 60 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. பயணிகளின் வசதிக்காக இன்று (மார்ச் 15) முதல் பயண முன்பதிவு காலம் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
passengersSETCtamil naduTN GovtTNSTC
Advertisement
Next Article