Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாலக்காட்டில் சோகம் - ஆற்று சுழலில் சிக்கிய 2 கல்லூரி மாணவர்கள்!

கல்லூரி மாணவர்கள் இருவர் சுழலில் சிக்கி மாயமான சம்பவத்தில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
05:34 PM Aug 09, 2025 IST | Web Editor
கல்லூரி மாணவர்கள் இருவர் சுழலில் சிக்கி மாயமான சம்பவத்தில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement

 

Advertisement

கேரள மாநிலம் பாலக்காடு சித்தூர் ஆற்றில் குளிக்கச் சென்ற கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் சுழலில் சிக்கி மாயமான சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ கௌதம் என்ற மாணவர் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு மாணவரான அருண் என்பவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடுமுறை தினமான இன்று, கோவை தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர் பாலக்காடு அருகே உள்ள சித்தூர் ஆற்றுக்குச் சென்றுள்ளனர். ஆற்றில் இறங்கிக் குளித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஸ்ரீ கௌதம் மற்றும் அருண் ஆகியோர் ஆற்றின் சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களின் நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஸ்ரீ கௌதம் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாயமான மற்றொரு மாணவரான அருணைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆற்றின் வேகம் மற்றும் சுழல் அதிகமாக இருப்பதால், தேடும் பணியில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும் இது ஒரு பேரிழப்பாக அமைந்துள்ளது.

Tags :
CollegeStudentsKeralaPalakkadSittoorRiverStudentSafetyTamilNadutragedy
Advertisement
Next Article