Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Chennai -ல் மீண்டும் சோகம் | சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு!

06:47 AM Sep 30, 2024 IST | Web Editor
Advertisement

மழை நீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை அசோக் நகர் பகுதியில் மழை நீர் கால்வாயில் விழுந்து, அம்பேத்கர் நகரை சேர்ந்த ஐயப்பன் என்பவர் உயிரிழந்து உள்ளார். உயிரிழந்தவரின் உடலை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வெளியான மேலும் முதல் கட்ட தகவலின் படி. அசோக் நகர் 100 அடி சாலை பகுதியில், மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மழை நீர் வடிகால் பணிகளை செய்து வருகின்றனர்.

சுமார் 8 அடி, அகலம் 8 அடி நீளம் கொண்ட இந்த மழை நீர் கால்வாயில், தடுப்புகள் அமைக்கப்பட்ட பாதுகாப்பாக பணிகளை அதிகாரிகள் செய்து வந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக இந்த பணி நடந்து வருகிறது. இந்த கால்வாய்க்கு அருகிலேயே அம்பேத்கர் நகர் அமைந்துள்ளது. இந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த ஐயப்பன் என்பவர், மழை நீர் கால்வாயில் தவறி உள்ளே விழுந்துள்ளார்.

அவரை உடனே மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர் மது போதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Tags :
Ashok NagarChennai
Advertisement
Next Article