Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

07:15 AM Jul 20, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள  குரூப்2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 

Advertisement

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜூலை 19 நேற்று உடன் முடிவடைந்த நிலையில் ஜூலை 20-ஆம் தேதியான இன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி,  குரூப்-2 நிலையில் காலியாக உள்ள 507 இடங்களையும், அதேபோல் குரூப்-2ஏ நிலையில் காலியாகவுள்ள 1,820 இடங்களையும் நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டது.

அதன்படி,  விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.  மேலும்,  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி  ஜூலை.19 என கூறப்பட்டிருந்தது.

அதன்படி, இணையவழி விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் இணைய வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என்று தேர்வர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று இன்று மாலை வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்திற்கான கடைசி நாள் இன்றாகும். இதன்படி, இன்று நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Govt JobGroup 2TNPSC
Advertisement
Next Article