Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புன்னைக்காயல் மீனவ கிராமத்திற்கு 8 நாட்களுக்கு பிறகு மின்சாரம்..!

09:01 PM Dec 25, 2023 IST | Web Editor
Advertisement

தனித்தீவாக மாறியிருந்த தூத்துக்குடி புன்னக்காயல் மீனவ கிராமத்திற்கு 8 நாட்களுக்கு பிறகு மின் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மீனவ கிராமத்தில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி வெள்ள நீர் புன்னக்காயல் பகுதியில் சென்று கடலில் கலக்கும் நிலை அங்கு உள்ளது. இதன்காரணமாக, அதிகப்படியான வெள்ளம் அவ்வழியே செல்வதால், புன்னக்காயல் மீனவ கிராமம் தனித்தீவு போல துண்டிக்கப்பட்டது.

அங்குள்ள மக்களுக்கு நீர், உணவு கிடைப்பதே பெரும் சிரமமாக இருந்தது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி சிறிது சிறிதாகவே சீரான நிலைக்கு திரும்பியது. மீட்புப்பணிகளை தமிழ்நாடு அரசு சார்பாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் புன்னக்காயல் கிராமத்திற்கு மீண்டும் மின்சார வசதி செய்து தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 நாட்களுக்கு பிறகு அந்த பகுதிகளில் மின்சார வசதி செய்து தரப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
heavy rainsNews7Tamilnews7TamilUpdatesPunnaikayalrainfallSouth TN RainsTamilnadu RainsThoothukudiThoothukudi Rains
Advertisement
Next Article