Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நான் நடிக்க வந்ததற்கு காரணமே இதுதான்.." - நடிகர் #Suriya பகிர்ந்த தகவல்!

01:52 PM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

தனது அம்மா வாங்கிய ரூ. 25,000 கடனை அடைப்பதற்காகத் தான் சினிமாவில் நடிக்க வந்ததாக நடிகர் சூர்யா தெரிரிவத்துள்ளார்.

Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வரும் நவ. 14-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (அக். 26) சென்னையில் நடைபெறவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்த நிலையில், நடிகர் சூர்யா சமீபத்தில் நேர்க்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

“நடிக்க வருவதற்கு முன்பாக பனியன் நிறுவனம் ஒன்றில் 15 நாள்களுக்கு ரூ. 750 ஊதியத்துடன் பயிற்சி பெற்றேன். பின்னர் அடுத்த 3 ஆண்டுகளில் எனக்கு ரூ. 8,000 மாத ஊதியம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, இந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு சொந்தமாக நிறுவனம் தொடங்கும் திட்டத்தில் இருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு கற்பனையில் கூட நடிக்கும் எண்ணம் இல்லை. ஆனால், எனது அப்பாவுக்கு தெரியாமல் அம்மா வாங்கிய ரூ. 25,000 கடனால் அனைத்தும் மாறியது.

என அப்பா நடித்ததற்கான சம்பளம் வர காலதாமதம் ஆன போதிலும் அவர் யாருக்கும் அழுத்தம் தரவில்லை. அவர்களாக சம்பளம் கொடுக்கும் வரை காத்திருந்தார். அதே நேரத்தில், சுமார் 10 மாதங்களுக்கு மேலாக எனது அப்பாவுக்கு வேலை இல்லாமல் இருந்தது. ஒரு நடிகரின் மகனாக எனக்கு பல வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. மணிரத்னம் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வந்த தொடர் அழைப்புகள் அனைத்தையும் மாற்றியது. அம்மா வாங்கிய கடனை அடைப்பதற்காக படத்தில் நடிக்க முன்வந்தேன். பின்னர் கடனும் அடைக்கப்பட்டது, எனது சினிமா பயணமும் தொடங்கியது.”

இவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Tags :
actor suriyadisha pataniKanguvamovienews7 tamilSivaSuriyatamil cinema
Advertisement
Next Article