Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருவண்ணாமலை தீப திருவிழா | பாதுகாப்பு பணியில் 14 ஆயிரம் போலீசார்!

05:28 PM Nov 25, 2023 IST | Web Editor
Advertisement

அண்ணாமலையார் கோயில் மகா தீபம் நாளை ஏற்றப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலை பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

Advertisement

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நாளை காலை பரணி தீபம் மற்றும் மாலை மகா தீபத்தைக் காண திருவண்ணாமலை நோக்கி பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. திருவண்ணாமலைக்கு பல்வேறு இடங்களிலிருந்து வர 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மகா தீபத்தை காண மலை மீது ஏற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 85 க்கு மேற்பட்ட மருத்துவ சிறப்பு முகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 300-க்கும் மேற்பட்ட கழிப்பிட வசதிகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில், தீபத்தைக் காண பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பாதுகாப்பு கருதி சுமார் 14,000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement
Next Article