Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இன்னொரு ரஜினி எப்போதும் வரப்போவதில்லை" - நடிகை #RitikaSingh

04:06 PM Oct 12, 2024 IST | Web Editor
Advertisement

இன்னொரு ரஜினி எப்போதும் வரப்போவதில்லை. அவரைப் போல இன்னொரு லெஜண்டரி மனிதன் பிறக்கப்போவதில்லை என நடிகை ரித்திகா சிங் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வேட்டையன். இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் இதன் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் அடித்த நிலையில், டிரைலரும் பலரும் கவனிக்கும் வகையில் அமைந்தது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், இந்தப்படம் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"ரஜினிகாந்துடன் இருக்கும்போது ஒருவர் அறியும் மிகப் பெரிய உண்மை என்ன என்றால், நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தால், தனித்துவமாக ஜொலிப்பீர்கள்.  வாழ்க்கை உங்கள் மீது எதை எறிந்தாலும், அப்போதும் அன்பாக இருக்க வேண்டும் என்ற முடிவையே தேர்ந்தெடுப்பீர்கள். அவர், கண்களின் மூலமாகவும் புன்னகையாலும் பகிரும் அன்பானது மிகுந்த சக்தி வாய்ந்தது. அது உங்களுக்குள் இருக்கும் காயங்களை ஆற்றும். ஒரு பார்வையிலேயே அவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு அளிக்கும் உணர்வை, நான் இதற்கு முன் அனுபவித்தது கிடையாது.

கேமரா ரோலிங்கில் இல்லாதபோது மிகவும் பொறுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இயல்பாக இருப்பார். ஆக்‌ஷன் என்று சொன்னதும் முற்றிலும் புதியவராக மாறுகிறார். இன்னொரு ரஜினி எப்போதும் வரப்போவதில்லை. அவரைப் போல இன்னொரு லெஜண்டரி மனிதன் பிறக்கப்போவதில்லை. ஒரு புதிய பிரபஞ்சம் உருவானாலும், இன்னொரு தலைவர் உருவாக முடியாது. ரஜினி ஒருவர் மட்டுமே."

இவ்வாறு நடிகை ரித்திகா சிங் பதிவிட்டுள்ளார்.

Tags :
actor rajinikanthcinemanews7 tamilRajiniRajinikanthRitika SinghThalaivar
Advertisement
Next Article