Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஸ்டேஷன்ல ஆள் இல்லை .. பாதுகாப்பு வேணும்னா நீங்களே ஸ்டேஷன் வந்துடுங்க.." - போலீசாரின் அலட்சியத்தால் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்

02:07 AM Jan 25, 2024 IST | Web Editor
Advertisement

"ஸ்டேஷன்ல ஆள் இல்லை .. பாதுகாப்பு வேணும்னா நீங்களே ஸ்டேஷன் வந்துடுங்க.." - போலீசாரின் அலட்சியத்தால் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

"குடித்து விட்டு நடுரோட்டில் தகராறு செய்ததை செய்தியாக வெளியிட்டால் கொன்று விடுவேன்" என  நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை மிரட்டிய நிலையில் அவர் மீது மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது  நியூஸ் 7 தமிழ் செய்திக் தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த  ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இவரை இன்று செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். வழக்கம் போல  இரவில் வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெட்டுக் காயங்களுடன்  உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செய்தியாளர் நேசப் பிரபுவை தகவலறிந்த  காமநாயக்கன்பாளையம் போலீசார் அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த  மர்ம நபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 கைகள் மற்றும் நெஞ்சுப் பகுதியில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. பல்லடத்தில் குடித்து விட்டு நடுரோட்டில் போலீசாரிடம் தகராறு செய்ததை, நியூஸ்7 தமிழில் செய்தி வெளியிட்டது; செய்தி வெளியானால் உன்னைக் கொன்றுவிடுவேன் என மர்ம நபர்கள் மிரட்டிய நிலையில் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது அரிவாளால் வெட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காவல்துறைக்கும் அவசர உதவி எண் 100க்கும் அவர் தொடர்ந்து அழைத்துள்ளார்.  இதற்கு பதிலளித்த காவலர் ஒருவர் ஸ்டேசன்ல ஆள் இல்லை. உங்களுக்கு பாதுகாப்பு வேணும்னா காவல் நிலையத்திற்கு வந்து விடுங்கள் என தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
JopurnalistNesa PrabhuNews7 ReporterNews7 Tamil ReporterReporter
Advertisement
Next Article