Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கை கூப்பி வணங்காத தாழ்த்தப்பட்ட முதியவர் மீது தாக்குதல் - ம.பி.யில் நிகழ்ந்த கொடூரம்!

03:13 PM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

கை கூப்பி வணங்காத தலித் முதியவரை உயர் சாதியினர் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

Advertisement

மத்திய பிரதேசத்தில் கை கூப்பி வணங்காத தலித் முதியவரை உயர் சாதியினர் 3 மணி நேரம் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.  உடைப்பிரா கிராமத்தைச் சேர்ந்த நேதுரம் அஹிர்வார் எனும் முதியவர் இந்த தீண்டாமைக் குற்றத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதையும் படியுங்கள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

நியாய விலைக் கடைக்கு சென்று திரும்பிய முதியவரை வழி மறைத்த 2 உயர் சாதியினர் அவரைக் கட்டி வைத்து 3 மணி நேரம் அடித்ததில் அவர் நடக்கும் திறனை தற்காலிகமாக இழந்துள்ளாதக் கூறப்படுகிறது.  அவரை சாதி பெயரைச் சொல்லியும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார்.

முதியவரின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  குற்றவாளிகள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் துணை ஆய்வாளர் மார்கண்டே மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

Tags :
dalitIndiaMadhya pradeshnews7 tamilNews7 Tamil Updatesold man
Advertisement
Next Article