Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”திமுக ஆட்சியை அகற்றி வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்துவிட்டது” - அன்புமணி ராமதாஸ் சூளுரை!

திமுக ஆட்சியை அகற்றி வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்துவிட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூளுரைத்துள்ளார்
03:08 PM Jun 19, 2025 IST | Web Editor
திமுக ஆட்சியை அகற்றி வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்துவிட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூளுரைத்துள்ளார்
Advertisement

சேலம் இரும்பாலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளிடையே சிறப்புரையாற்றினார்.

Advertisement

அப்போது அவர் பேசியதாவது, “என் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளனர் அனைத்து குற்றச்சாட்டுகளும் 100% பொய்யானவை. இன்னும் சில நாட்களில் அதை நான் தெளிவுபடுத்துவேன். நம் சமுதாயத்திற்காக என் மனம் மிகுந்த சுமையை சுமந்து கொண்டிருக்கிறது. திமுகவிற்கு பயம் வந்துவிட்டது வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள் யாரும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் இதனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நான்காண்டு காலமாக திமுக ஆட்சியில் இட ஒதுக்கீடு தருவதாக கூறி வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தருவார் என நம்பிக்கையோடு இருந்தோம். நம்பி கழுத்தை அறுத்து விட்டார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரிய பாடம் புகட்டப்படும்.  சேலம் தருமபுரி மாவட்டத்தில் திமுக ஒரு இடம் கூட வெற்றி பெறக் கூடாது. இபிஎஸ் வன்னியர்களுக்காக வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ஒரு மாதத்திற்கு முன்பாக வழங்கியிருந்தால் சட்ட சிக்கல் வந்திருக்காது. திமுகவின் ஆட்சி அகற்றக் கூடிய நேரம் வந்துவிட்டது.

பாமக வலுவான கட்சி. அடுத்த கட்டத்திற்கு பாமக செல்ல வேண்டும். என் வாழ்க்கையில் முதல் முதலில் கட்சிக்கொடி ஏற்றியது சேலம் மேற்கு மாவட்டத்தில் தான். நீங்கள் கொடுத்த தைரியத்தால் தான் நான் இந்த நிலையில் உள்ளேன்.  இங்கு நடைபெறும் குழப்பத்தை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் களத்தில் தைரியமாக இருக்க வேண்டும். திமுகவின் 530 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தனர். 60- 70 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு பயணம். 10 அரசியல் சாசன உரிமைகளை வலியுறுத்தி செல்ல உள்ளேன்.  திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நடைபயணமாக அமையும். சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சியை
அகற்றி வீட்டுக்கு அனுப்புவோம் காலம், நேரம் வந்துவிட்டது”

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
Anbumani RamadossDMKPMKSalem
Advertisement
Next Article