Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆம்புலன்ஸில் சென்ற உடல்நிலை சரியில்லாத உரிமையாளர்... கலங்க வைத்த செல்லப்பிராணியின் பாசப்போராட்டம்!

04:16 PM Sep 14, 2024 IST | Web Editor
Advertisement

உடல் நிலை சரியில்லாததால் தனது உரிமையாளரை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றதை அறிந்த அவரது செல்லப்பிராணி, வழி நெடுகிலும் பின்தொடர்ந்து ஓடிய காட்சி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

Advertisement

மனிதனின் உற்ற தோழனாக வலம் வருபவை வளர்ப்பு பிராணிகள். இதில், நாய்களுக்கு தனி இடம் உண்டு. ஆதிகாலம் தொட்டு நாய்களும் மனிதர்களும் ஒருவரையொருவர் நேர்மறையான தொடர்புகளை கொண்டு இருந்துள்ளனர். ஆதி மனிதன் தனது வேட்டைக்கு உதவியாக நாய்களை பழக்கி பயன்படுத்தியதன் தொடர்ச்சி இன்றும் பல்வேறு இடங்களில் நம்மால் காண முடியும். இவை காவலிலும் ஈடுபட்டு மனிதனின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

மனிதர்கள் காட்டும் அன்பை விட பல மடங்கு அதிகமாக அன்பு செலுத்தும் செல்ல பிராணிகள் அதிகம் இருக்கும் சூழலில் அதில் நாய்கள் தவிர்க்க முடியாதவை. நாய்கள் மீது நாம் கொஞ்சம் பாசம் காட்டினாலே நமக்கு ஏதாவது பிரச்னை என்றால் முதல் ஆளாக வந்து நின்றுவிடும். நமது குடும்பத்திலோ, நெருங்கிய நண்பர்கள் அல்லது நமக்கு பிரியமானவர்களுக்காக எந்த எல்லைக்கு செல்வதற்காகவும் நாய்கள் தயாராக இருக்கும்.

இதற்கு சிறந்த உதாரணமாக சமீபத்தில் கேரளா வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில், நாய் ஒன்று தப்பி உயிரோடு இருக்க, அது தனது உறவினர் எங்கே இருக்கிறார்கள் என தேடி அலைந்தது பலரையும் கண்ணீர் வடிக்க வைத்திருந்தது. செல்லப்பிராணிகளுக்கு பேச மட்டுமே முடியாது என்றாலும் மற்ற அனைத்து குணங்களையும் அவர்களால் மனிதர்களிடம் வெளிப்படுத்த முடியும்.

https://twitter.com/TaraBull808/status/1834313531631550812

இந்நிலையில் சமீபத்தில் தன்னை பாசமாக பார்த்துக் கொண்ட உரிமையாளருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, நாய் ஒன்று செய்த சம்பவம் தற்போது பலரையும் கலங்க வைத்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவில், ஆம்புலன்ஸ் ஒன்று சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. பின்னால் நாய் ஒன்று துரத்திக் கொண்டே ஓடுகிறது. அந்த நாயின் உரிமையாளரை தான் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த நாயும் சில தூரம் இடைவிடாமல் துரத்திக் கொண்டே சென்றதாக கூறப்படுகிறது.

இதனை கவனித்த ஆம்புலன்ஸில் இருந்த நபர், உடனடியாக வண்டியை நடுரோட்டிலேயே நிறுத்தி ஆம்புலன்ஸின் பின் கதவை திறந்தார். அந்த நாய் வேகமாக உள்ளே ஏறியது. அந்த நாய் ஏறியதும் ஆம்புலன்ஸ் மீண்டும் வேகமாக கிளம்பியது. அதன் பின்னர் நாய் சற்று சமாதானம் அடைந்தது போல் இருந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பெரிய அளவில் பார்ப்போரை நெகிழ வைத்து வருகிறது. நமக்கு நெருக்கமாக இருப்பவர்களே முதலில் வருவதற்கு தயங்க இந்த நாய் செய்த செயல் பலருக்கும் சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

Tags :
ambulanceColombiaDogHeart TouchingLoyalNews7TamilVideo
Advertisement
Next Article