Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசுப் பேருந்தை இயக்கிய அனுபவமற்ற ஓட்டுநர் - நடுவழியில் நின்ற பேருந்தை தள்ளிச் சென்ற பயணிகள்!

11:20 AM Jan 09, 2024 IST | Jeni
Advertisement

சேலத்தில் அனுபவமற்ற ஓட்டுநர் மூலம் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால், அதில் பயணித்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Advertisement

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்த நிலையில், ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து நேற்று(ஜன.8) மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியரும்,  வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதியடைந்துள்ளனர்.  பல ஓட்டுநர்கள்,  நடத்துநர்கள் பணிக்கு வராததால்,  வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் இயக்கப்படாமல்,  குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனிடையே தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் ஆங்காங்கே இயக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள் : தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து சேற்றில் சிக்கி விபத்து..!

அந்த வகையில் சேலத்திலும் பல்வேறு வழித்தடங்களில் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், சேலத்தில் அனுபவமற்ற ஓட்டுநர் மூலம் இயக்கப்பட்ட பேருந்து ஒன்று,  நடுவழியில் பழுதாகி நின்றது.  சேலம் ஐந்து ரோடு பகுதியில் பழுதாகி நின்ற அந்த பேருந்து,  பயணிகள் உதவியுடன் நகர்த்திச் செல்லப்பட்டது.  இதனால் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags :
BusStrikeissueSalemTNGovtTNSTCTransportStrike
Advertisement
Next Article