Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது இந்திய வானிலை ஆய்வு மையம்!

02:32 PM Apr 29, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.

Advertisement

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில்,  வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது வெயில்.  தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வருகிறது.  இந்த நிலையில்,  தமிழ்நாடு,  புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு மே 1 ஆம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுத்திருந்தது.

இதையும் படியுங்கள் : வேட்புமனுவை வாபஸ் பெற்று, பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்! இந்தூரில் பரபரப்பு!

இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் படி,  தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. மேலும்,  தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவின் ஒரு சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும்,  ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால்,  தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்டிருந்த மஞ்சள் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.  மே 1ம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்ப அலைக்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது.  இதையடுத்து, தமிழ்நாட்டில் மே 2ம் தேதி 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.

Tags :
ChennaiHeatMeteorological CentreRegionalmeteorologicalcentresummerTamilNaduWeather
Advertisement
Next Article