1800 கிலோ உணவு பொருட்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர்..!
1800கிலோ மதிப்பிலான உணவு பொருட்கள் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு வழங்குவதற்காக இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் 24 மணி நேரத்திற்கு தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு வானிலை மிக மோசமாக இருந்ததால் மதுரை விமான நிலையத்தில் நேற்று இரவு 9.40 மணியளவில் இந்திய விமான படை ஹெலிகாப்டர் ஆனது தரையிறக்கப்பட்டது.
இந்த ஹெலிகாப்டர் மதுரை மாவட்டத்தில் இருந்து கிளம்பி சரியாக 20 நிமிடங்களில் திருநெல்வேலி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிகவும் தண்ணீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாத பகுதிகளில் சென்று பொது மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.