Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மனைவியை 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவன் | ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்!!

12:47 PM Nov 07, 2023 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றம்,  2020 ஆம் ஆண்டில் தனது மனைவியைக் கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Advertisement

அமெரிக்க செய்தித்தாள் தி சன் சென்டினலின் அறிக்கைப்படி,  2020 ஆம் ஆண்டில்,  குற்றம்சாட்டப்பட்ட பிலிப் மேத்யூ தனது செவிலியர் மனைவி மரியான் ஜாயின் (26) காரை மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் வழிமறித்து,  17 முறை கத்தியால் குத்திவிட்டு ஜாய்யின் உடல் மீது காரை ஏற்றியுள்ளார்.  இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர்.

இந்த வழக்கு வெகு நாட்களாக நடந்து வந்த நிலயில்,  தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  கூடுதலாக, அவர் தனது மனைவியை பயங்கரமான ஆயுதத்தால் மோசமாகத் தாக்கியதற்காக அதிகபட்சமாக மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

Advertisement
Next Article